பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவி களுக்கு வினா-விடை கையேடுகள் வழங்கினர்.
பத்தாம் வகுப்பு பிரெவே பொதுத்தேர்வு எழுத இருக்கும், கலவை கல்லுாரி அரசு ஆண்கள் பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி மற்றும் பான்சியோனா அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாண வர் மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில் வினா-விடை கையேடு தயாரிக்கப்பட்டது. இதன் வெளியீட்டு விழா கலவை கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கலவை கல்லுாரி அரசு ஆண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வைத்தியநாதன் வரவேற்றார்.
பான்சியோனா அரசு பெண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளி தலைமை யாசிரியை குப்பம்மாள் தலைமை தாங்கினார். பெண் கல்வி துணை இயக்குனர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றி, வினா-விடையை வெளியிட்டார். பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர் களுக்கு வினா-விடை கையேடுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர்கள் எட்வர்டு சார்லஸ், ராஜன் ஜார்ஜ், யமுனா பங்கேற்றனர்.
No comments:
Post a Comment