Friday, February 12, 2016

எஸ்எஸ்எல்சி தேர்வு மாணவர்களுக்கான பதிவு எண்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம் தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு தேர்வு பதிவு எண்கள் ஒதுக்கிய பட்டியலும் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன. வரும் 22ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அறிவியல் பாடத்தில் இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும் சோதனைகள் தொடர்பான அட்டவணைகள் 15ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் வர உள்ளன. இதை அடிப்படையாக வைத்து 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கி மார்ச் 5ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment