Wednesday, February 15, 2017

10ம் வகுப்பு தேர்வுக்கு ’தக்கல்’ தேதி அறிவிப்பு!

சென்னை: நாளை முதல், இரண்டு நாட்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, ’தக்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி செய்திக் குறிப்பு: 

நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத, தனித்தேர்வர்கள், நாளை முதல் இரு நாட்கள், ’தக்கல்’  திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 

http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், தேர்வுத் துறை சேவை மையங்கள் மற்றும் தேர்வு விபரங்கள் இடம் பெற்றுஉள்ளன.

மாவட்ட கல்வி அலுவலகங்கள், மண்டல துணை இயக்குனர் அலுவலகம் ஆகியவற்றிலும், விபரங்களை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment