Wednesday, February 22, 2017

பத்தாம் வகுப்பு பிராக்டிகல் இன்று துவங்குகிறது

 பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த மாதம் துவங்க உள்ளது. பிளஸ் 2 செய்முறை தேர்வு, ஓரிரு பாடங்களுக்கு மட்டுமே பாக்கி உள்ளது. 

இந்நிலையில் பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு இன்று துவங்குகிறது. வரும், 28 வரை நடக்கிறது. இதில், 351 பள்ளிகளைச் சேர்ந்த, 13 ஆயிரத்து, 639 மாணவர்கள், 13 ஆயிரத்து, 293 மாணவியர் என, மொத்தம், 26 ஆயிரத்து, 932 பேர் தேர்வு எழுதுகின்றனர். 

இதற்காக, 99 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அறிவியல் பாடத்துக்கான செய்முறை தேர்வு இன்று நடக்கிறது.

No comments:

Post a Comment