Wednesday, March 30, 2016

ஆங்கிலம் 2வது தாளில் மாணவர்களுக்கு குழப்பம்

பத்தாம் வகுப்பு தேர்வில்படம் வரையும் பேப்பர் இணைக்காததால்மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து வருகிறது. நேற்று ஆங்கிலம்,இரண்டாவது தாள் தேர்வு நடந்தது. அதில் விளம்பரம் சம்பந்தமாகஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு படம் வரைந்து பதில் அளிக்க வேண்டும். இதற்காக கோடு போடாத பேப்பர் ஒன்று இணைக்கப்படும். 
நேற்று நடந்த தேர்வில், 12வது கேள்வி விளம்பரம் சம்பந்தமாக கேட்கப்பட்டிருந்தது. ஆனால்படம் வரைய விடைத்தாளில் கோடு போடாத பேப்பர் இணைக்கப்படவில்லை. இதுகுறித்து மாணவர்கள்,அறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்குஅவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. இதனால் கோடு போட்ட பேப்பரிலேயே படம் வரைந்து விட்டு மாணவர்கள் வந்துள்ளனர். 
இதனால்ஐந்து மதிப்பெண் கொண்ட இந்த கேள்விக்குமுழு மதிப்பெண் கிடைக்குமா என மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் பல பள்ளிகளில் இதே போல் வந்துள்ளது. இதுகுறித்து,கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்குஅவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

No comments:

Post a Comment