Tuesday, March 15, 2016

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு

தமிழகத்தில்இன்று துவங்கும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில்,வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்துசென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் அல்லாத மொழியைதாய்மொழியாகக் கொண்டவர்கள்பிளஸ் 2 தேர்வில்தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளித்துசமீபத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்விலும்தமிழ் மொழி பாடத்துக்கு விலக்கு அளிக்கக் கோரிஉயர் நீதிமன்றத்தில்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குரு துரோணாச்சாரியா பள்ளி உள்ளிட்ட சில பள்ளிகள் சார்பில்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், &'எங்கள் பள்ளிகளில்வேறு மொழியை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் படிக்கின்றனர். எனவேதமிழ் மொழி பாடத்துக்கு பதில்மாணவர்களின் தாய் மொழி பாடத்தை எழுதஅனுமதிக்க வேண்டும்&' எனகூறப்பட்டது.
மனுக்களை விசாரித்ததலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: விதி விலக்கு கோரிகுறித்த நேரத்தில்மாணவர்கள் விண்ணப்பித்து விட்டனர். பள்ளிகள் தரப்பில் தான்கால தாமதம் ஏற்பட்டுள்ளதுஅதுவும், 10 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினாலும்சில பிரச்னைகள் ஏற்பட்டன. பள்ளிகள் தரப்பில்விண்ணப்பங்களை அனுப்ப கால தாமதம் ஏற்பட்டதற்காகமாணவர்கள் பாதிக்கக் கூடாது. 
ஏற்கனவேதமிழ் மொழி பாடத் தேர்வுக்கு விலக்கு அளித்துஉத்தரவு பிறப்பித்துள்ளோம். எனவே,மனுதாரர்களுக்குதமிழ் மொழி பாடத் தேர்வு எழுதவிலக்கு அளிக்கப்படுகிறது. மனுதாரர்களை போல் உள்ள மற்ற மாணவர்களும்தேவையின்றி கஷ்டப்படக் கூடாது. அரசு தேர்வு இயக்குனரகத்தைஇன்று மாலை, 5:00 மணி வரை அணுகிநீதிமன்றத்தை அணுக இயலாதவர்களுக்கும்இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment