Tuesday, March 15, 2016

10ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்; முறைகேடுகளை தடுக்க பறக்கும் படை தயார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. முறைகேடுகளைத் தடுக்க, 7,000 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி.எனப்படும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுதமிழகம் மற்றும் புதுச்சேரியில்இன்று துவங்குகிறது. காலை, 9:15 மணி முதல், 12:00 மணி வரை தேர்வு நடக்கும். முறைகேடுகள் நடக்காமல் தடுக்க,அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டுஅறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஏராளமானோர்சென்டம் எடுத்தனர். அதை கட்டுப்படுத்தஇந்த ஆண்டு,பாடங்களின் உள்ளே இருந்து சிக்கலான கேள்விகள் இடம் பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால்உரிய விதிகளின் படி தண்டனை வழங்கப்படும். 
ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால்தேர்வு மைய அங்கீகாரம் ரத்துபள்ளி அங்கீகாரம் ரத்து செய்ய பரிந்துரைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனதேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment