Sunday, January 24, 2016

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை!

தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில்அரசு பள்ளிகளில் படிக்கும்பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை எனபள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.

மதுரையைச் சேர்ந்தடான் அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம்பசுமை மற்றும் துாய்மை என்ற தலைப்பில்பள்ளி மாணவர்களை கொண்டு, 14 மாவட்டங்களில் நடைபயணம் நடத்தபள்ளிக்கல்வி துறையில் அனுமதி கேட்டு உள்ளது.
இதையடுத்துமதுரைராமநாதபுரம்சேலம்திண்டுக்கல்தேனிதுாத்துக்குடிகடலுார்திருவள்ளூர்,கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்சென்னைதஞ்சாவூர்நாகை மற்றும் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்குபள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன்அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதில்டான் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில்அரசு பள்ளிகளில் படிக்கும்பிளஸ் மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள்எந்த காரணம் கொண்டும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது எனதெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment